2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

12 மணிநேரத்துக்குள் கஞ்சா கடத்திய 4 பேர் கைது

க. அகரன்   / 2018 நவம்பர் 15 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் 12 மணிநேரத்துக்குள் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களின் போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் சென்ற பஸ்ஸில் கஞ்சா கடத்திச் சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து 1 கிலோ 580 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் நேற்று (14) மாலை முதல் இன்று (15) அதிகாலை வரை இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின்போது, வெளிமாவட்டங்களுக்குச் சென்ற பஸ்ஸில் கஞ்சா கடத்திச் சென்ற 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .