2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’அக்கராயனுக்கு ஆபத்து’

Yuganthini   / 2017 ஜூன் 26 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன் ஆற்றுப் படுகைகளிலும் சுபாஸ் குடியிருப்பு, மணியங்குளத்தின் பின்பகுதி ஆகிய பகுதிகளிலும், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு ,இரு இடங்களில் பொலிஸ் காவல் அரண்களை அமைக்குமாறு, அக்கராயன் பகுதி பொது அமைப்புகள், அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

அக்கராயன் அணைக்கட்டு வைரவர் கோவில் அடியிலும், ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டம் பிள்ளையார் கோவில் அடியிலும் காவலரண்களை அமைப்பதன் மூலம், அக்கராயன் அணைக்கட்டு வீதி வழியாகவும் திருமுறிகண்டி வீதி வழியாகவும், வெளி இடங்களுக்கும் கொண்டுசெல்லப்படும் மணல் கடத்தலைக் கட்டுப்படுத்த முடியும் என, அவ்வமைப்புகள் தெரிவிக்கின்றன்

அக்கராயன் பொலிஸார் வழங்குகின்ற ஒத்துழைப்பின் அடிப்படையில்தான் மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் கிளிநொச்சி அக்கராயனில் நடைபெறுகின்ற மணல் அகழ்வுகளுடன் முக்கிய அதிகாரிகளுக்கும் தொடர்புகள் இருப்பதன் காரணமாகவே, சட்டவிரோமான முறையில் வெளி இடங்களுக்கு மணல் கடத்தப்படுவதாகவும் அவ்வமைப்புகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக, ஜனாதிபதியிடம் நேரடியாக மனு கையளிக்கப்பட்ட போதிலும், இப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படவில்லை.இதன் காரணமாக அக்கராயன் குளத்தின் கீழான விவசாய முயற்சிகள் எதிர்காலத்தில் பெரும் அழிவை எதிர்கொள்ளும் எனவும் அக்கராயன் குளத்தின் அணைக்கட்டில்இருந்து குறைந்தது மூன்று கிலோமீற்றருக்கு அப்பால் மணல் அனுமதிகளை மாவட்டச் செயலகத்தின் அதிகாரிகள் நேரடியாக வருகை தந்து பார்வையிட்டு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .