2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இரு பெரிய குளவி கூடுகள் அகற்றப்பட்டன

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் இரண்டு மிகப்பெரிய குளவிக்கூடுகள், நேற்று (18) இரவு 10.30 மணியளவில் அழிக்கப்பட்டன.

இக்குளவி கூடுகளில் ஒன்று சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தின் அருகிலும் மற்றையது இரத்த வங்கிக்கு அருகிலும்  காணப்பட்டது. இக்குளவிகளின் தொல்லைகளை நோயாளர்  நலன்புரி சங்கத்தினர் கரைச்சி பிரதேச சபையிடம் தெரிவித்ததன் பிற்பாடு   இதனை கரைச்சி பிரதேச சபையின்  தீயணைப்பு பிரிவின் உதவியுடன்  இக் குளவிக் கூடு  அழிக்கப்பட்டது. அத்துடன் இச்செயல்பாட்டில் தவிசாளர் செயலாளர் உறுப்பினர் ப.குமாரசிங்கம் நோயாளர் நலன்புரி சங்க தலைவர்  செயலாளர் உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் பங்களிப்புடன் தீயணைப்பு பிரிவினரால் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .