2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2019 மார்ச் 30 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால், கிளிநொச்சியில் இன்று (30) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம், இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைத் தேடி கிளிநொச்சியில், 769 நாள்களாக சுழற்சி முறையிலான போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், மாதம் தோறும் ஒவ்வொரு  30ஆம் திகதியும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் .

அந்தவகையில் இன்றும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .