2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘கூட்டமைப்பு விருது வழங்கும் நிகழ்வை புறக்கணிக்கவுள்ளது’

க. அகரன்   / 2018 நவம்பர் 29 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘வடமாகாண முன்னாள் முதலமைச்சர் பிரதம விருந்தினராக கலந்து கொள்வதால், வவுனியா நகரசபையினால் நடத்தப்படும் விருது வழங்கும் நிகழ்வை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர்கள் புறக்கணிக்கவுள்ளதாக’ நகரசபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு  உறுப்பினர் தி.செந்தில்ரூபன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘வவுனியா நகரத்தின் மத்திய பஸ் நிலையத்தை சரியான முறையில் கையாண்டு முடிவுகளை எடுத்து செயற்படுத்த தவறியதையடுத்து வவுனியாவுக்கு கிடைக்க வேண்டிய 10 மில்லியன் ரூபாவை நகரசபை இழந்துள்ளதுடன், பலநூறு பேருக்கு வேலைவாய்ப்புக்களும் இழக்கப்பட்டுள்ளது. பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இவற்றுக்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

இதனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர்கள் வவுனியா நகரசபையினால் நடத்தப்படும் விருது வழங்கும் அரசியல் நிகழ்வை புறக்கணிக்கின்றோம்’ என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .