2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொக்குத்தொடுவாயில் மக்கள் இடம்பெயர்வு

Editorial   / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் கடும்மழை காரணமாக கொக்குத்தொடுவாய் வடக்கு, கருநாட்டுக்கேணி கிராமங்களில் இருந்து மக்கள் இடம்பெயரத் தொடங்கியுள்ளார்கள்.

வெள்ளம் வீடுகளுக்குள் தங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இதுவரை 28 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் இடம்பெயர்ந்து கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் மக்களுக்கு உதவிகளை வழங்கவுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .