2024 மே 02, வியாழக்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு: உழவு இயந்திரங்களுடன் இருவர் கைது

Editorial   / 2020 ஜூலை 09 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட சுதந்திரபுரம் ஆற்றுப்பகுதியில், நேற்று (08) சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்களைக் கைப்பற்றிய சிறப்பு அதிரடிப்படையினர், அதன் சாரதிகளையும் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

பின்னர் இவ்விருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .