2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தனியார் பஸ் சேவை பகிஸ்கரிப்பு

Editorial   / 2019 மார்ச் 18 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவுக்கான தனியார் பஸ் சேவை பகிஸ்கரிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டது.

வவுனியா பஸ் நிலையத்தில் ஏற்பட்ட முறண்பாட்டை அடுத்து இன்று முதல் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக, கிளிநாச்சி தனியார் போக்குவரத்து சங்க தலைவர் நகுலன் தெரிவித்தார்.

ஏனைய மாவட்டங்களை போன்று குறுந்தூர சேவை அடிப்படையில் சேவைகளை முன்னெடுக்கும் வகையில் சேவைகளை அங்கிருந்து முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பில் வவுனியா நீதிமன்ற உத்தரவை மீறி செயற்படுவதாகவும் தெரிவித்தே குறித் பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வவுனியா தனியார் போக்குவரத்து சங்கத்தினர் குறித்த விடயம் தொடர்பில் ஐந்து நாள்களுக்குள் தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளதாகவும், அதுவரை குறித்த பகுதிக்கான சேவையை மேற்கொள்ள கிளிநாச்சி மாவட்ட தனியார் போக்குவரத்து பஸ் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .