2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘தேர்தலை பிற்போட்டால் ஆதரவு வழங்குவோம்’

Editorial   / 2020 மார்ச் 18 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

கொரோனா வைரஸின் தாக்த்தை கருத்திற்கொண்டு, நாடாளுமன்றத் தேர்தல் பிற்போடப்படுமாக இருந்தால், அதற்கு ஆதரவு வழங்க தாம் தயாராக இருப்பதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய தேர்தல் வேட்பாளருமான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டச் செயலகத்தில், இன்று (18)  வேட்பு மனு தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருக்கிறதெனவும் தம்மை பொறுத்தவரை மக்களின் பாதுகாப்பே முக்கியமெனவும் கூறினார்.

தற்போது தமிழ் கட்சிகள் சில பிரிந்து தேர்தலை சந்திக்கும் நிலையிலும் தமிழ் மக்களிடம் தெளிவான நிலைப்பாடு இருக்கிறதெனத் தெரிவித்த அவர், தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற சில கேள்விகளிற்கு தெளிவான பதில் வழங்கப்படுமெனவும் கூறினார்.

“கூட்டமைப்பானது, தமிழ்மக்களின் தனித்துவதிற்காக செயற்படுகின்ற ஒரு கட்சி. எனவே, வட- கிழக்கில் பெரியளவிலான வெற்றியை  எமது கட்சிபெறும்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .