2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நெத்தலியாற்றுப் பாலத்தை மீளமைக்குமாறு கோரி தர்மபுரம் மக்கள் போராட்டம்

Editorial   / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி - பரந்தன் ஏ-35 வீதியில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் தர்மபுரம் - நெத்தலியாற்றுப் பாலத்தை மீளமைக்குமாறும் வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்குமாறும் தர்மபுரத்தில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை நிவர்த்தி செய்யுமாறும் கோரி, அப்பகுதி மக்களால், இன்று (15) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் முடிவில், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் முகமாக, தர்மபுரம் புனித சபேரியார் ஆலய பங்குத்தந்தை அன்டனி வின்சன் சில்வஸ்டர் தாஸிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .