2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நிஸ்கோ வியாபார நிலையத்துக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

Editorial   / 2018 ஜூலை 15 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஓர் அங்கமாக இயங்கி, இளைஞர்களின் சுயதொழில் வாய்ப்பு சுயதொழில் கடன்கள் சுயதொழில் பயிற்சி ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு சங்கம் (நிஸ்கோ) இளைஞர்களுக்கான சேவைகளை செவ்வனே நடத்துவதற்காக தனக்கான வருமானத்தை ஈட்டும் நோக்குடனும் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தும் முயற்சியாக மாங்குளத்தில் வியாபார நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளது.

இதன் முதற்கட்டமாக குறித்த கட்டடத்தை அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் (13) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திருமதி சறோயா குகநேசதாசன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான சத்தியசுதர்சன்  ஆ ஜோன்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .