2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதுக்குடியிருப்பில் தேர்தல் பரப்புரைக் கூட்டம்

Editorial   / 2020 ஜூலை 22 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன் 

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி தேர்தல் தொகுதி  வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம், புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில், நேற்று (21) மாலை நடைபெற்றது.

புதுக்குடியிருப்பு மாற்றத்துக்கான இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் துணைத் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளர் என் சிறிகாந்தா, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, புதுக்குடியிருப்பு நகரில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .