2024 மே 08, புதன்கிழமை

மன்னாரில் கொரோனா தொடர்பில் விழிப்புணர்வு

Editorial   / 2020 மார்ச் 19 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் விழிர்ப்புணர்வை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில், மன்னாரில், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், நேற்று மாலை 5 மணியளவில், மன்னார் பஸார் பகுதியில் மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி வைக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் நகர தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் பெனடிற் குரூஸ் உட்பட இளைஞர்கள் இணைந்து, குறித்த விழிர்ப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கியதுடன், விழிர்ப்புணர்வு பதாதைகளையும் காட்சிப்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X