2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முல்லைத்தீவில் 136,623 பேர் மீள்குடியேற்றம்

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

முல்லைத்தீவு மாவட்டத்தில், இதுவரை நாற்பத்தி நான்காயிரத்து 120க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து முப்பத்தி ஆறாயிரத்து 623 பேர் மீள்குடியேறியுள்ளதாக, மாவட்ட செயலகத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 13,890 குடும்பங்களைச் சேர்ந்த 42,826 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 13,423 குடும்பங்களைச் சேர்ந்த 40,512 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 6,291 குடும்பங்களைச் சேர்ந்த 19,990 பேரும், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 4,055 குடும்பங்களைச் சேர்ந்த 12,465 பேரும், மாந்தைக் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 3,125 குடும்பங்களைச் சேர்ந்த 9,641 பேரும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 3,336 குடும்பங்களைச் சேர்ந்த 11,189 பேரும் மீள்குடியேறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .