2024 மே 04, சனிக்கிழமை

நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல்;ஜெனரல் பொன்சேகா சபாநாயகரிடம் முறைப்பாடு

Super User   / 2010 மே 04 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்படுவதாக ஜனநாயக தேசிய முன்னணியின்  தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா இன்று சபாநாயகரிடம் முறைப்பாடு செய்தார்.

நண்பகல் ஒரு மணியுடன் அவரை இராணுவ நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்காக அழைத்துச் செல்வதாக இராணுவத்தினர் அறிவித்ததாக அவர் மன்றில் கூறினார். 

நாடாளுமன்றம் இன்று மாலை வரையில் நடைபெறுவதால், தான் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்த ஜெனரல் சரத் பொன்சேகா,          இராணுவத்தினரின் இந்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்துமாறும் கோரினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .