2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் சிக்கினர்

George   / 2017 மே 20 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதை மாத்திரைகளை வைத்திருந்தக் குற்றச்சாட்​டில் இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

35 ​போதை மாத்திரைகளுடன் கொழும்பு,  பொரளையில் வைத்து 18 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹெய்யன்துட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞனே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதே​வேளை,  5 ​போதை மாத்திரைகளுடன் கொழும்பு,  மருதானையில் வைத்து மற்றுமொரு இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மருதானையில் வசித்து வரும் இளைஞனே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களையும் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .