2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சாவகச்சேரி மாணவன் கொலை;ஈ.பி.டி.பி உறுப்பினர் விளக்கமறியலில்

Super User   / 2010 மே 03 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். சாவகச்சேரி வர்த்தகர் மகனின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, யாழ் சாவகச்சேரி நீதிவான் இதற்கான உத்தரவினைப் பிறப்பித்தார்.

யாழ் சாவகச்சேரி வர்த்தகரின் மகனான  குறித்த மாணவன் 30 மில்லியன் ரூபா கப்பம் கோரி கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி  கடத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட மூன்று மாணவர்களில் ஒருவரின் வளவுக்குள் இருந்து குறித்த மாணவன்  கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி  சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .