2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலங்கையின் தற்போதைய நிலைமையில் கவனம் செலுத்துமாறு ஐ.ஒன்றியத்திடம் அரசு கோரிக்கை

Super User   / 2009 டிசெம்பர் 11 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் எதிர்கால ஜி.எஸ்.பி வரிச்சலுகை திட்டத்தை ஆராய்வதற்கு முன்னர் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்திடம் அரசாங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இலங்கையில் மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு, மேம்படுத்தல் ஆகியவற்றுக்கான தேசிய திட்டத்தை விரைவில் வெளியிடவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

யுத்தம் முடிவடைந்திருக்கின்ற நிலையில்    இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான விடயம் இன்னும் உள்ளதென்பதை ஐரோப்பிய ஒன்றியம் கவனத்திற்கொள்ளவேண்டுமெனவும்  அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .