2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வன்முறைகளின் பின்னணியில் முன்.இராணுவத்தினர்; அரசு குற்றச்சாட்டு

Super User   / 2010 ஜனவரி 22 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெறுகின்ற தேர்தல் வன்முறைகளின் பின்னணியில் இராணுவத்திலிருந்து வெளியேறியவர்கள்  இருப்பதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

வெளிவிவகார அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இராணுவத்திலிருந்து வெளியேறியவர்கள்  ஆயுதங்களை கையாள்வதில் மாத்திரமல்லாது, அவர்கள் இவ்வாறான ஆயுதங்களை தம்வசம் வைத்துள்ளனர் எனவும் வெளிவிவகார அமைச்சு  குறிப்பிட்டது.

ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் பரிச்சயமான முன்னாள் கிளர்ச்சியாளர்களும் எதிர்க்கட்சியினரில் ஒரு பகுதியாக உள்ளனரெனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .