Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
'மௌனத்தை கலையுங்கள் வாழ்க்கையில் வெற்றிகொள்ளுங்கள்' என்னும் தலைப்பிலான இருநாள் கருத்தரங்கொன்றை தேவைநாடும் மகளிர் அமைப்பினர் செங்கலடி பிரதேச செயலகத்தில் நடத்தினர்.
அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சங்கீதா தர்மரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம வளவாளர்களாக அமைப்பின் சட்ட ஆலோசகர் கிருத்திகா முத்துராஜா, ஜெயசிறி ஆகியோருடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உளவள நிபுணர் சசிகலா பரமகுரு ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.
அத்துடன் ஏறாவூர், செங்கலடி, கிராண், வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை ஆகிய பிரதேசங்களுக்குட்பட்ட பகுதிகளில் சமுர்த்தி அதிகாரிகளாக செயற்படுவோரும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர். பெண்கள் மீதான வீட்டு வன்முறைகள், சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் ஆகியவற்றுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து இங்கு விளக்கமளிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago