2025 ஜூலை 12, சனிக்கிழமை

கல்முனையில் விபத்து; ஒருவர் பலி; இருவர் காயம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.எ.அஸீஸ்)

கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சாய்ந்தமருதிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று குறித்த பகுதியில் வைத்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த சாய்ந்தமருது பிரதேசத்தின் மாளிகைக்காடு கிராமத்தைச் சேர்ந்த 19 வயதையுடைய எஸ்.எம்.நியாஸ் என்பவர் ரே மரணமடைந்துள்ளார்.

மேலும் இவ்விபத்தில் சிக்கிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .