2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஆற்று மணல் ஏற்றியவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா 

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 5ஆம் கட்டைப் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரத்தை மீறி சட்டவிரோதமாக ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட  நபரொருவருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தை  அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற பதில் நீதவானும், நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமாகிய எஸ்.ஏ.ஆர். ஆகிலா, இன்று வியாழக்கிழமை (03) விதித்துள்ளார்.
 
அக்கரைப்பற்று பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து குறித்த நபர், நேற்று புதன்கிழமை (02) கைது செய்யப்பட்டார். 
 
இந்நபரை, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற பதில் நீதவானும், நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமாகிய எஸ்.ஏ.ஆர். ஆகிலா முன்னிலையில் இன்று (03) ஆஜர்படுத்திய போதே மேற்கண்டவாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X