2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

உதவி முகாமையாளரை கொலை செய்த சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்வோதய அபிவிருத்தி நிதிக் கம்பனியின் உதவி முகாமையாளரான பெண்ணொருவரை, வெட்டிக் கொலை செய்தகுற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை, எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், இன்று திங்கட்கிழமை (08) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி காரியாலயத்துக்குச் சென்று கடமையாற்றிக் கொண்டிருக்கும் போதே இக் கொலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.

குளோரி வீதி நற்பிட்டிமுனை, கல்முனையைச் சேர்ந்த ராஜேஸ்வரன் சுலக்ஷனா (வயது 33) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பாயாஸ் றஸாக் முன்னிலையில் மீண்டும் இன்று (08) ஆஜர் செய்த போது தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X