2025 மே 19, திங்கட்கிழமை

உள்ளூர்த் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 20 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கவேலாயுதபுரம் பகுதியில் உள்ளூர்த் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாகக் கூறப்படும் 38 வயதுடைய ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (19) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து அத்துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.

இச்சந்தேக நபரிடம் உள்ளூர்த் துப்பாக்கி இருப்பதாக தமக்குக் தகவல் கிடைத்ததாகவும் இதனை அடுத்து, குறித்த பகுதிக்குச் சென்று தேடுதல் நடத்தியபோது இவரிடம் துப்பாக்கி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X