2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 மே 13 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
 
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல் தீவுப் பிரதேசத்தில் 550 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரொருவருக்கு, 07 ஆயிரத்தி 500 ரூபாய் அபராதம் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி, இன்று வெள்ளிக்கிழமை (13) உத்தரவிட்டார். 
 
அக்கரைப்பற்று பொலிஸாரால் குறித்த நபர், நேற்று வியாழக்கிழமை (12) மாலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.
 
சந்தேகநபரை, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் இன்று (13) ஆஜர்செய்த போதே நீதவான் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X