2025 மே 19, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு சிறைத்தண்டனை

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் 02 கிராம் கஞ்சா போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 01 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாஹாப்தீன், நேற்றுப் புதன்கிழமை  விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

பொத்துவில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை குறித்த நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபருக்கு ஏற்கெனவே நீதிமன்றில் 02 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில் இத்தண்டனையின் காலம் முடிவடைவதற்குள் இக்குற்றம் புரிந்துள்ளதால் ஒத்திவைக்கப்பட்டுள்ள 02 வருட சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துமாறும் மொத்தம் 03 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனையும் வழங்கி 10 ஆயிரம் அபராதம் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 06 மாதங்களுக்கு கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X