2025 மே 19, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்தவரை சமூக சேவையில் ஈடுபடுத்த உத்தரவு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 06 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் 02 கிராம் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன், 300 மணித்தியாலங்கள்; சமூக சேவையில் ஈடுபடுமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான நளினி கந்தசாமி, செவ்வாய்க்கிழமை (05) உத்தரவிட்டார்.

மேற்படி நபர் கஞ்சா வைத்திருந்தமை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, கஞ்சா இருந்தமை தெரியவந்தை அடுத்து செவ்வாய்க்கிழமை (05) இவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X