2025 ஜூன் 28, சனிக்கிழமை

கஞ்சா வைத்திருந்த இருவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரில் ஒருவருக்கு 11,000 ரூபாய் அபராதமும் மற்றைய நபருக்கு 7,500 ரூபாய் அபராதமும் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான எச்.எம்.முஹம்மட் பஸீல் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்தச் சந்தேக நபர்கள் இருவரையும் இன்று செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அக்கரைப்பற்று முதலாம் பிரிவு பழைய சினிமா வீதியிலுள்ள மாடுகள் கட்டும் இடத்தைச் சுற்றிவளைத்து நேற்று திங்கட்கிழமை தேடுதல் நடத்தியபோது, அங்கு 27 மற்றும் 30 வயதுடைய இவர்கள் இருவரையும் கைதுசெய்ததுடன், இவர்களிடமிருந்து இரண்டு  கஞ்சாக் கட்டுக்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .