2025 மே 22, வியாழக்கிழமை

கணக்காளார்களுக்கு இடமாற்றம்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்ட வலயக் கல்விப் பணிமனைகளில் கடமையாற்றுகின்ற  கணக்காளர்கள் 09 பேருக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் செயற்படும் வண்ணம் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் தெரிவித்தார்.  

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின்; கணக்காளர் கே.றிஸ்வியஸ்ஹர் கல்முனை வலயக் கல்விப் பணிமனைக்கும் கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் கணக்காளர் எல்.ரி.சாலிதீன் அம்பாறை வலயக் கல்விப் பணிமனைக்கும் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையின் கணக்காளர் எ.எச்.தஸ்தீக் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனைக்கும் திருக்கோவில் வலயக் கல்விப் பணிமனையின் கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனைக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், திருக்கோவில் வலயக் கல்விப் பணிமனைக்கும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள கணக்காளர் பி.ஹன்ஸ்டன் திருக்கோவில் வலயக் கல்விப் பணிமனைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். அம்பாறை வலயக் கல்விப் பணிமனையின்  கணக்காளர் கே. பசில் அம்பாறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண  பிரதம செயலாளரினால் இவ்விடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X