Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா, எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
கல்முனை மாநகரசபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலியை வர்த்தகர் ஒருவர்; அச்சுறுத்தித் தாக்க முற்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் குறித்த வர்த்தகரை கைதுசெய்யுமாறு கோரியும் மாநகரசபை ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை பணிப்பகிஷ்ரிப்பில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டப் பேரணியும் மேற்கொண்டனர்.
மாநகரசபையிலிருந்து கல்முனை பொலிஸ் நிலையம்வரை பேரணியாகச் சென்ற ஊழியர்கள், பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, மாநகரசபை ஊழியர்களுடன் கலந்துரையாடிய கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ அப்துல் கப்பார், ஆணையாளரை அச்சுறுத்தித் தாக்க முற்பட்ட சந்தேக நபரைக் கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறினார்.
இதனை அடுத்து, அங்கிருந்து ஊழியர்கள் கல்முனை நகரைச் சுற்றி பேரணியாகச் சென்று மாநகரசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சனிக்கிழமை (03) மாலை சாய்ந்தமருது நகருக்குச் சென்ற ஆணையாளர், மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் கடைக்கு முன்பான வீதியோர நடைபாதையில் மோட்டார் சைக்கிளொன்று விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்து, அம்மோட்டார் சைக்கிளை கடைக்குள் வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை அடுத்து, அக்கடை உரிமையாளர், ஆணையாளர் மீது தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டதுடன், அவரை அச்சுறுத்தித் தாக்கவும் முற்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஆணையாளர் முறைப்பாடு செய்தார். இருப்பினும், குறித்த நபர் இதுவரையில் கைதுசெய்யப்படாமையைக் கண்டித்து பணிப்பகிஷ்கரிப்புடன் ஆர்;ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டதாக மாநகரசபை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இப்பணிப்பகிஷ்கரிப்புடன் கூடிய ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக மாநகரசபையின் அனைத்துப் பணிகளும் ஸ்தம்பிதமடைந்ததுடன், மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில்; குப்பை அகற்றும் சேவையும் நடைபெறவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .