2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கல்முனை மாநகர சபையில் விசேட நிகழ்வு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 25 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

தேசிய ஆரோக்கிய வாரத்தையிட்டு கல்முனை மாநகர சபையில் இன்று திங்கட்கிழமை விசேட நிகழ்வு நடைபெற்றது.

மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆரம்பத்தில் உடல் ஆரோக்கியம் தொடர்பான சுகாதார அமைச்சின் பிரகடனம் வாசிக்கப்பட்டு, அது தொடர்பான அறிவுரை வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாநகர சபை முன்றலிலிருந்து நகர நெடுஞ்சாலை ஊடாக சுமார் 500 மீற்றர்; வரையான தூரம் நடைப்பயிற்சி இடம்பெற்றது. இதில் மாநகர சபையின் நிர்வாக உத்தியோகஸ்;தர் ஏ.எம்.ஆரிப், சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத், முதல்வரின் பிரத்தியேகச் செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் உட்பட மாநகர சபை உத்தியோகஸ்தர்களும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X