2025 மே 19, திங்கட்கிழமை

கல்வி நடவடிக்கை 11இல் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 07 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர்; பயிற்சிக் கலாசாலையில் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக அக்கலாசாலையின் அதிபர்; அஷ்ஷெய்க் ஏ.சீ.எம்.சுபைர், இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

றமழான் விடுமுறைக்காக கடந்த ஜூன் மாதம் 02ஆம் திகதி மூடப்பட்ட இக்கலாசாலையில் இன்று வியாழக்கிழமை முதல் கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள பயிற்சி ஆசிரியர்கள் எதிர்வரும் 10ஆம் திகதி மாலை 06 மணிக்கு முன்பாக சமூகமளிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X