2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Niroshini   / 2015 நவம்பர் 10 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

பாலமுனை இப்னு ஸீனா கனிஸ்ட வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது.

பாசாலை அதிபர் எஸ்.எம்.சாக்கிர் ஹீஸையின்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் மௌலவி ஏ.எல்.எம்.காசிம் பிரதம அதிதியாகவும் அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி, பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலய அதிபர்  எஸ்.எம்.எம்.ஹனிபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாணவர்களுக்கு கற்பித்து வழி காட்டிய ஆசிரியர்கள் அதிதிகளினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .