2025 ஜூன் 26, வியாழக்கிழமை

குளவிக் கொட்டுக்குள்ளான இளைஞன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, ஒலுவில் கிராமத்தைச் சேர்ந்த பாறூக் முகம்மது பாயிஸ் (வயது 21) என்ற இளைஞன், கடந்த வெள்ளிக்கிழமை (18) குளவிக் கொட்டுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் திங்கட்கிழமை (21) இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

ஓ.பி.ஏ.வீதியால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இந்த இளைஞனை பனை மரத்திலிருந்த 30 க்கும் மேற்பட்ட குளவிகள் சூழ்ந்து கொட்டியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, ஒலுவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த இளைஞன்,  மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்திருந்ததாகவும் அத்தகவல்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .