Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.மொஹமட் பஸீல் நேற்று திங்கட்கிழமை 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
அம்பாறை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு, கண்ணகிபுரம் பிரதேசத்தில் மணல் அகழ்ந்து டிப்பர் வாகனத்தில் ஏற்றிய நபரை ஞாயிற்றுக்கிழமை (29) மாலை கைது செய்த பொலிஸார் டிப்பர் வாகனத்தையும் கைப்பற்றினர்.
இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை (29) கண்ணகிபுரம் பிரதேசத்தில் அம்பாறை குற்றத்தடுப்பு பொலிசார் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி உழவு இயந்திரத்தின் இழவைப் பெட்டியில் ஆற்று மணல் ஏற்றிய இருவரை கைது செய்து நேற்று திங்கட் கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிபதி ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் மற்றவருக்கு ஐயாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago