2025 மே 19, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற இருவர் கைது

Gavitha   / 2016 ஜூன் 30 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜமால்டீன்

அம்பாறை  ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வீடுகளுக்கு மின்சாரம் பெற்ற இரண்டு பேரை, புதன்கிழமை (29) இரவு, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் அம்பாறை பிராந்திய அலுவலக புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களும் அக்கரைப்பற்று பொலிஸாரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின் போதே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோளாவில்-1ஆம் பிரிவைச் சேர்ந்த நபரொருவரும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய முன் வீதியைச் சேர்ந்தவர் மற்றொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளதாகவும் இது தொடர்புடைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X