Princiya Dixci / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

றாசிக் நபாயிஸ்
சவுதி அரேபியாவில் இயங்கி வரும் மதீனா பல்கலைக்கழகமான ஜாமியத்துல் இஸ்லாம் பில் மதீனாவிற்கு வருடா வருடம் மௌலவி பட்டம் முடித்த மாணவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது வழமை.
அந்த வகையில், இவ்வருடம் இலங்கையிலிருந்து 25 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன், அதில் கல்முனை பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இரண்டு மாணவர்கள் கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியின் மாணவர்கள் என கல்லூரியின் அதிபர் ஏ.சி.தஸ்தீக் (மதனி) தெரிவித்தார்.
மருதமுனை அக்பர் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மட் தெளபீக் றபீக்கா தம்பதிகளின் மூத்த புதல்வரான எம்.ரி.அல்தாப் (ஹாமி) மற்றும் சாய்ந்தமருது முதலாம் பிரிவைச் சேர்ந்த அப்துல் மஜீத் முஹம்மட் தம்பி றுவைதாவின் இரண்டாவது புதல்வரான எம்.எம்.றிஸ்ஹான் (ஹாமி) ஆகியோர் ஹாமியா அரபுக் கல்லூரியில் 8 வருடங்கள் கல்வி கற்று மௌலவி பட்டம் முடித்து வெளியேறிய மாணவர்களாவர்.
உயர்தரத்தில் சித்தி அடைந்த இருவரும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்துக்கு தெரிவாகி உள்ளதுடன், அல்தாப், இஸ்லாமிய கற்கை நெறிகள் மற்றும் அரபி மொழிப் பிரிவிலும்
றிஸ்கான், கலை, கலாசார பிரிவிலும் முதலாம் வருட மாணவர்களாக கல்வி கற்று வருகின்ற நிலையிலேயே மதீனா பல்கலைக்கழகத்தில் கற்பதற்கு இவர்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது.
17 minute ago
25 minute ago
28 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago
28 minute ago
30 minute ago