2025 மே 19, திங்கட்கிழமை

சுகாதாரம் பேணிய உணவகத்தை திறக்க உத்தரவு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 30 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, கல்முனைப் பிரதேசத்தில் பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தற்காலிகமாக இரு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த இரண்டு உணவகங்களில் ஓர் உணவகத்தை மீள திறக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ;

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர்; ஏ.எல்.அலாவுதீனின் ஆலோசனைக்கு அமைய கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட உணவகங்களில் கடந்த சனிக்கிழமை 04ஆம் திகதி சோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன்போது,  பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்ததாக இனங்கானப்பட்ட 07 உணவகங்களுக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 05 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டும் இரண்டு உணவகங்களை தற்காலிகமாக மூடுமாறு நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இவ்விரு உணவகங்கள் தொடர்பான வழக்கு விசாரணை நேற்றுப் புதன்கிழமை  கல்முனை நீதவான் நீதமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சுகாதாரத்தைப் பேணிய ஓர் உணவகத்தை மீள திறக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும், மற்றைய உணவகத்தின் அறிக்கையை இரு வார காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X