2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சூதாடிய நால்வருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 21 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்     

திருகோணமலை, கந்தளாய்ப் பிரதேசத்தில் சூதாடிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நான்கு இளைஞர்களை இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் ருவன் திஸாநாயக்க புதன்கிழமை (20) உத்தரவிட்டார்.   

பணத்துக்காக இளைஞர்கள் சிலர் சூதாடிக் கொண்டிருந்த இடத்துக்கு பொலிஸார் சென்றதாகவும் இதன்போது, நான்கு பேரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சிலர் இளைஞர்கள் தப்பியோடியதைத் தொடர்ந்து அவர்களைத் தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X