2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களை கண்டித்து பேரணி

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

சிறுமி சேயா செதவ்மியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்ததாகக் கூறப்படும் கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்குமாறு கோரியும் நாட்டில் இடம்பெற்றுவரும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சம்மாந்துறை இளைஞர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மாத் தொழுகையின் பின்னர் சம்மாந்துறையில்  எதிர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது.

சம்மாந்துறை ஹிஜ்ரா ஜூம்மாப் பள்ளிவாசலிலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி ஹிஜ்ரா சந்திவரை சென்றது.

'சிறுவர்களுக்கான துஷ்பிரயோகங்களை எதிர்ப்போம்', 'நேற்று வித்தியா, இன்று சேயா, நாளை?', 'அரசே சிறுமி சேயாவினை கொலை செய்த கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்' உள்ளிட்ட வாசகங்கள் எழுதிய வாசக அட்டைகளையும் பேரணியில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .