Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
சுற்றுலா விசாவில் வந்து வேளாண்மை வெட்டும் தொழிலில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 24, 25 வயதுகளையுடைய இருவரையும் எதிர்வரும் 25ஆம் திகதிவரை மிரியான தடுப்பு முகாமில் தடுத்துவைத்து அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்புமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல், நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
அம்பாறை, சம்மாந்துறை வயல்வெளியில் இவர்கள் இருவரும் வேளாண்மை வெட்டும் இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடையில் ஈடுபடுவதாக தமக்குத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த வயல்வெளிக்குச் சென்று நேற்றுமுன்தினம் புதன்கிழமை இவர்களைக் கைதுசெய்ததாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025