2025 மே 21, புதன்கிழமை

தென்னைமரம் விழுந்ததில் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்க வீதிக்கு அருகிலுள்ள வீட்டு வளவொன்றில் காணப்பட்ட தென்னை மரமொன்று அடியோடு பாறி விழுந்ததில்; அவ்வீட்டில் உறக்கத்திலிருந்த தாயும் மகளும் அதிர்ச்சிக்குள்ளாகி மயக்கமடைந்து காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, குறித்த வீடும் பலத்த சேதமடைந்துள்ளது.
தாயான ப.ராஜகுமாரி (வயது 43) மற்றும் அவரது மகள் ப.தனுஸ்கா  (வயது 11) ஆகியோரே இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் சற்றுக் காற்றும் வீசியதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X