2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

திவிநெகும உதவி பெறுகின்ற பெண்  தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார வேலைதிட்டத்தின் கீழ், தையல் இயந்திரங்கள் இன்று வியாழக்கிழமை கல்முனை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.

68 குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக  06 குடும்பம்களுக்கு வழங்கப்பட்டன.

திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர்  எ.ஆர்.எம்.சாலிஹ்யின் ஒருங்கிணைப்பிலும் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகமட்  ஹனி  தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சர்  எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .