2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

துவிச்சக்கரவண்டியில் பயணித்த யுவதி உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, பக்கிஎல்ல பகுதியில் வெல்லாவெளி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டியுடன் மோதி, நேற்று வியாழக்கிழமை (04) விபத்துக்குள்ளானதில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

துவிச்சக்கரவண்டியைச் செலுத்தி வந்த ரஜகலதென்ன பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கேஷானி உதேசிகா என்பவரே உயிரிழந்துள்ளார். 

விபத்தில் காயமடைந்த யுவதியை கொனாகொல்ல வைத்தியசாலையில் அனுமதித்து, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக  அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றியிருந்த நிலையில் சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்தில் காயடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பக்கிஎல்ல பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X