2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நிந்தவூர்வாசி ஹப்புத்தளையில் மரணம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுலைமான் றாபி
 
ஹப்புத்தளை வரலாற்று புகழ்மிக்க எடிசன் பங்களாவை பார்வையிடுவதற்குச் சென்றவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டி 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் நிந்தவூரைச்சேர்ந்த 36 வயதான நபர், மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிந்தவூர் 12யைச் சேர்ந்த முஹம்மட் அனீஸ் என்பவரே மரணமடைந்துள்ளார். 

சம்பவத்தையடுத்து முச்சக்கரவண்டியின் சாரதியை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X