2025 ஜூலை 05, சனிக்கிழமை

நாவிதன்வெளியில் பற்றைகள் அழிப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 04 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ், நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சவளக்கடை, கம்பிக்காலை கிராமத்தில் பற்றைகளை அழிக்கும் நடவடிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

நாவிதன்வெளி பிரதேச செயலகம், நாவிதன்வெளி பிரதேச சபை, சவளக்கடை பொலிஸ் நிலையம், நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியன இணைந்து வேலைத்திட்டத்தை முன்னெடுத்தது.

பற்றைகள் மற்றும் புதர்கள் அடர்த்தியாக காணப்படும் இப்பிரதேசத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து,  அக்குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் எஸ்.கரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .