2025 மே 21, புதன்கிழமை

பதவி விவகாரம்:வழக்கு ஒத்திவைப்பு

Niroshini   / 2016 மார்ச் 24 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் பதவி தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாடு, கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி அக்கட்சியின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில், குருநாகலில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் கட்சிக்கு புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதன்போது புதிய செயலாளராக சுபைதீன் ஹாஜியார் என்பவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த மாநாடு கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணாக கூட்டப்பட்டது எனவும் அதனால் புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகம் செல்லுபடியற்றது எனவும் உத்தரவிடக்கோரி அதன் முன்னாள் செயலாளர் நாயகமான வை.எல்.எஸ்.ஹமீட், கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு, புதன்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, நீதிபதி அதனை எதிர்வரும் மே மாதம் 03ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக, கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன், புதிய செயலாளர் சுபைதீன் ஹாஜியார் உட்பட 15 பேர்  குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணையின்போது ,அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவைத் தவிர ஏனைய 14 பிரதிவாதிகளும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .