2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பாசிப்பயறு அறுவடை விழா

Thipaan   / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா,ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை அக்கரைப்பற்று ஆலிம்நகர் பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்ட பாசிப்பயறு அறுவடை விழா நேற்று வெள்ளிக்கிழமை(10) நடைபெற்றது.

அக்கரைப்பற்று விவசாய போதனா ஆசிரியர் ஏ.ஜீ. பிர்னாஸ் ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.எம். லத்தீப், உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர், நிர்ப்பாசன பொறியிலாளர் ஐ. மயூரன், பாடவிதான உத்தியோகத்தர் ஏ. முபாறக் உட்பட விவசாயிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

நெற்செய்கை காணியிலேயே இடைக்காலப் பயிர்ச்செய்கையாக பாசிப்பயறு பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X