2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு அனோமா கமகே பாடுபடுவார் : தயா கமகே

Niroshini   / 2015 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்,வி.சுகிர்தகுமார்

அம்பாறை மாவட்ட பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான செயற்திட்டத்தை அனோமா கமகே முன்னெடுப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளர் எம்.எம். முஹம்மட் நிஸாம் தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் பெண்கள் சார்பாக அனோமா கமகேயை நியமித்துள்ளார்.

அவர் பெண்கள் அமைப்போடு இணைந்து குறிப்பாக அம்பாறை மாவட்ட பெண்களுக்காக பாடுபடுவார்.

மேலும்,நான் அமைச்சர் பதவியை பொறுப்பேற்றவுடன் எனக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்வேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X