2025 மே 22, வியாழக்கிழமை

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 ஜனவரி 25 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா 

அம்பாறை, சவளக்கடை பிரதேசத்தில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரொருக்கு 7,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 03 மாத காலத்துக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக், இன்று திங்கட்கிழமை (25) உத்தரவிட்டார்.
 
அம்பாறை, இங்கினியாகல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) சவளக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
 
குறித்த நபரை, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக் முன்னிலையில் இன்று (20) ஆஜர்செய்த போது மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, 03 மாத காலத்துக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X